Header Ads



22 மாடி கட்டிடத்தில் தீ - இலங்கையர் உட்பட 7 பேர் பலி (படங்கள்)


பங்களாதேஷ் நாட்டின் தலைநகரமான டாக்காவின் பனானி பகுதியிலுள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது. 

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த இலங்கையர் ஒருவர் உட்பட 7 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மீட்புப் பணியில் அந்நாட்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 35 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.



No comments

Powered by Blogger.