150 கோடி முஸ்லிம்களின் சார்பில், நியூஸிலாந்து பிரதமருக்கு நன்றி
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து முஸ்லிம்களுக்கு ஆதரவை வழங்கிய நியூஸிலாந்து பிரதமரின் நடவடிக்கையை கௌரவிக்கும் விதமாக டுபாயில் உள்ள மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் அவருடைய படம் ஒளிபரப்பப்பட்டது .
மேலும் 1.5 பில்லியன் முஸ்லிம்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக டுபாய் அரசின் துணைத்தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தௌம், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டார்ரன்ட் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 பள்ளிவாசல்கள்களுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நியூஸிலாந்திலும், வெளிநாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Post a Comment