Header Ads



லிப்டில் சிக்கிய Mp களினால், விடுக்கப்பட்ட எச்சரிக்கை - புன்னகையுடன் பதிலளித்த கரு

விமல் வீரவன்ச,தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன , தயாசிறி ஜயசேகர , சந்திம வீரக்கொடி உட்பட்ட பல எம் பிக்கள் பார்லிமென்ட் லிப்ட்டில் சுமார் 25 நிமிடம் சிக்கிக் கொண்டனர்.

அது குறித்து சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தினேஷ் எம் பி , லிப்ட் ஒன்றை ஒழுங்காக செய்ய முடியாத பாராளுமன்றமாக இது மாறிவிட்டதா என கேள்வியெழுப்பினார்.

உயிர்களை எடுக்கும் சதியாக இது இருக்கலாம் என்பதால் சபாநாயகர் இதனூடாக செல்லும்போது கவனமாக இருக்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

அப்போது பதிலளித்த சபாநாயகர் “ நேரம் வந்தால் போக வேண்டி வரும்” என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

இங்கு பேசிய விமல் வீரவன்ச எம் பி , ஜனாதிபதி வேட்பாளராக வரப்போவதாக சொல்லப்படும் சபாநாயகர் இதில் கவனமாக செல்லவேண்டுமென குறிப்பிட்டார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து வெளியிடும்போது , இது பாரதூரமான பிரச்சினை என்றும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் இந்த லிப்ட்டில் சிக்கியது பெரும் ஆபத்து என்று பந்துல குணவர்தன எம் பி குறிப்பிட்டார்.

சந்திரசிறி கஜதீர , ரவி கருணாநாயக்க, சந்திம வீரக்கொடி , தயாசிறி ஜயசேகர , சரத் பொன்சேகா ,ரஞ்சித் சொய்சா , நளின் பண்டார , முஜிபுர் ரஹ்மான் , ஆசு மாரசிங்க ஆகியோரும் இந்த விடயம் குறித்து பிரஸ்தாபித்தனர்.

இது குறித்து உடனடி கவனம் செலுத்தப்படுமென சபாநாயகர் குறிப்பிட்டார்.

-Siva..

No comments

Powered by Blogger.