திக்திக் நிமிடங்கள், அச்சத்தில் Mp கள், மரண பயத்தில் வேதமந்திரங்களை ஓதினர்
இன்று -07- காலை பாராளுமன்றத்தில் உள்ள லிப்ட்டில் பல எம் பிக்கள் சிக்கிக் கொண்டனர் அல்லவா...!
சுமார் 25 நிமிட நேரம் மின்தூக்கி இடையில் இறுகி நின்றதால் வெளியில் தொடர்புகளை ஏற்படுத்த முடியாமல் அச்சத்தில் உறைந்து போயினர் எம் பிக்கள்.
அதில் சிலர் மரணத்தில் இருந்து காப்பாற்றும் வேதமந்திரங்களை ஓத தொடங்கினராம்...
உள்ளே இருந்த பந்துல குணவர்தன MP ஒரு ஆசிரியர் அல்லவா ?
“ காற்றோட்டம் இல்லை... எல்லோரும் சுவாசிப்பதை குறையுங்கள்..மூச்சை கட்டுப்படுத்துங்கள்...” என்று ஆலோசனை சொன்னாராம்...
எப்படியோ மின்தூக்கி இயங்காததை கண்ட வெளியில் இருந்தவர்கள் அது குறித்து தகவல் வழங்கியதையடுத்து பொறியியலாளர்கள் விரைந்து எம் பிக்களை மீட்டனர்...
-Siva-
Post a Comment