Header Ads



ரணிலையும், மகிந்தவையும சந்திக்கிறது JVP

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சித் தலைமையகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி அவரது இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு இன்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், ஐக்கிய தேசியக் கட்சியினரையும் சந்தித்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான ஆதரவைப்பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.