அதாவுல்லாவின் சந்தேகத்தினாலே, கட்சியிலிருந்து விலகினேன் - உதுமாலெப்பை
தேசிய காங்கிரஸில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை தலைவருக்கு அனுப்பியுள்ளதாக எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் நேற்றிரவு (20) நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.
கடந்த சில காலமாக தலைவருடன் இருக்கும் சிலர் கட்சிக்குள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தலைவரின் சந்தேகப் பார்வை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
Post a Comment