Header Ads



குற்றங்கள் அதிகரித்துவிட்டன - குற்றவாளிகளை வீரர்களாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்தனும் - மஹிந்த

நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக, எதிர்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லுணுகம்வெஹேர பகுதியியில் நேற்று (23) இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வாயிலாக  வீரர்கள் போன்று சித்திரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளதுடன், இதனை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.