Header Ads



கணவனின் அசிட் தாக்குதலில் மனைவி மரணம், மகள் படுகாயம் - கம்புறுப்பிட்டியவில் சம்பவம்

கம்புறுப்பிட்டிய - போலஹெவத்த - ரன் கெகுலாவ பிரதேச வீடு ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் மகள் மீது அமிலத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் 39 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், மகள் கம்புப்பிட்டிய - ஆதபான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது தந்தை மற்றும் ஒரு நபருடன் வந்து குறித்த அமில தாக்குதலை மேற்கொண்டதாக அமில தாக்குதலுக்குள்ளான மகள் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.