Header Ads



'முட்டாள் வேலை, செய்ய வேண்டாம்' மைத்திரிக்கு மகிந்த புத்திமதி

“மைத்திரி நான் செய்த முட்டாள் வேலையை நீங்கள் செய்ய வேண்டாம்” என தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தமக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனவே உரிய காலத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் உத்தேசம் தமக்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் அரசியல் நிலைமைகள் சீர்குலைந்துள்ள காரணத்தினால் ஒட்டுமொத்த நாடும் சீர்குலைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் ஊழல் மோசடிகளே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி மைத்திரி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.