Header Ads



"கஞ்சிப்பான இம்ரான்" என்ற பெயர், எப்படி வந்தது..? பெயரை பாவித்து, கப்பம் பெற்றவர் கைது

டுபாயில் கைதான கஞ்சிப்பான இம்ரான் என்ற பெயர் எப்படி அவருக்கு வந்தது என்று சில நாட்களாக யோசித்தேன்.

தெரிந்த முஸ்லிம் நண்பர்களிடம் கேட்டேன்... பாதுகாப்புத்துறை வட்டாரங்களிடம் அறிய முயன்றேன்.

ம்ஹும்.. ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை.

இன்று -13- காலை ஆமர் வீதியில் இருந்து மருதனைக்கு செல்லும்போது ஒரு ஆட்டோ நானாவிடம் கேட்டேன்..

“தம்பி அவர் ஒரு கஷ்டப்பட்ட பொடியன்... சின்ன காலத்தில இருந்து கஞ்சி வித்து வாழ்க்க நடத்தி வந்ததால தான் அவருக்கு அந்த பேர் வந்திச்சு...” என்றார் அவர்..

அட... இதான்யா மேட்டர் என்று நான் நினைத்து முடிப்பதற்குள் அவர் சத்தமாக சிரித்துக் கொண்டே சொன்ன இன்னொரு பிற்குறிப்பு.

“ஆனா தம்பி அந்த கஞ்சிப்பானைக்குள்ள கஞ்சி தான் இருந்திச்சான்னு எனக்கு தெரியா..”

2

டுபாயில் கைதான கஞ்சிப்பான இம்ரானின் பெயரைப் பயன்படுத்தி வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றதாக சொல்லப்படும் ஒருவர் மாளிகாவத்தையில் கைது..!

-Sivarajah-

No comments

Powered by Blogger.