Header Ads



இதுவரைக்கும் ஜனாதிபதி, வேட்பாளர் யாரென முடிவெடுக்கப்படவில்லை - ரணில்

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது வரைக்கும் வேட்பாளர் யார் என்றுமுடிவெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என்று அந்தக் கட்சியின் அமைச்சர்களால் கூறப்பட்டு வரும் நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த தேர்தலையும் எதிர் கொள்ள ஐக்கிய தேசிய முன்னணி தயாராகவுள்ளது.

ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் தான் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் இறுதி முடிவெடுப்போம்.

எமது அணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் சிலர் கருத்துக்களை வெளியிடுவார்கள். சில கறுப்பு ஊடகங்கள் திரிவுபடுத்தி செய்திகளையும் வெளியிடும்.

இவற்றை கண்டு நாம் அஞ்சமாட்டோம்; குழம்பமாட்டோம். எமது அணி - எமது கட்சி எப்போதும் ஒற்றுமையுடன் இருக்கின்றது.

'ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி'யை முறியடித்த எமக்கு தேர்தலில் வெல்வது கடினமல்ல.

ஜனாதிபதித் தேர்தலோ அல்லது நாடாளுமன்ற தேர்தலோ அல்லது மாகாணசபைத் தேர்தலோ நடைபெற்றாலும் அனைத்துத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியே வெற்றிவாகை சூடும்.

ஐக்கிய தேசிய முன்னணி விரைவில் ஜனநாயக தேசிய முன்னணியாக பதிவு செய்யப்படும்.

ஜனநாயக தேசிய முன்னணியின் பெயரிலேயே நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் நாம் களமிறங்குவோம். எமது பங்காளிக் கட்சிகள் இதில் உறுதியாகவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.