Header Ads



குற்றவாளி கூண்டிலுள்ளவர்களுக்கு, விமர்சிக்கும் உரிமை வழங்கப்படவில்லை

(நா.தினுஷா)

19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை மீறி மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை நிலைநாட்ட போராடும்  மஹிந்த தரப்பினரின் முயற்சிகளுக்கு இடமளிக்க போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -28- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,  

தமது நலன்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் குற்றவாளி கூண்டிலிருந்து தப்பித்து கொள்வதற்காகவும் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தம் மீது எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவையாகும். 

மேலும் அரசியல் அமைப்பு பேரவை, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிதுறை ஆகியவை குறித்து விமர்சிக்கும் உரிமை குற்றவாளி கூண்டிலுள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.