Header Ads



இந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்


இந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன்  ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலிபானின் வெற்றியினால் உந்தப்பட்டு தற்கொலைகுண்டுதாரியாக மாறவிரும்பினார்  என தெரிவிப்பதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

.புல்வாமாவில்  இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலிற்கு உரிமை கோரும் இளைஞனின் வீடியோக்கள் வெளியாகியுள்ளன

குறிப்பிட்ட இரு வீடியோக்களும், அடில் அஹமட் டாரினை தாக்குதலை மேற்கொண்ட மாவீரனாக சித்தரித்துள்ளன

தாக்குதலிற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோக்களே வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட வீடியோவில் தோன்றும் இளைஞன் ஒருவன தனது பெயர் அடில் அஹமட் தார் என தெரிவிக்கின்றார்.

இந்திய காவல்துறையினர் குறிப்பிட்ட நபரே வெடிமருந்துகள் நிரம்பிய வாகனத்தை செலுத்தினார் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வீடியோவில் அந்த இளைஞன் துப்பாக்கிகளுடன் காணப்படுகின்றார் சுற்றியும்  பல துப்பாக்கிகள் காணப்படுகின்றன. இதுதவிர கைக்குண்டுகள் ரவைகளும் காணப்படுகின்றன

வீடியோக்களின் பின்னணியில் ஜெய்சி- முகமட் அமைப்பின் பதாகைகளை காணமுடிகின்றது.

ஒருவருட காலமாக காத்திருந்த பின்னர் நான் நினைத்ததை செய்வதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது, என அடில் அஹமட் டார் தெரிவிக்கின்றார்

இந்த வீடியோ உங்களை வந்தடையும் வேளை நான் சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்பேன்-இது காஸ்மீர் மக்களிற்கான எனது இறுதி செய்தி எனவும் அடில் அஹமட் டார் தெரிவிப்பதை காணமுடிகி;ன்றது.

காஸ்மீர் இளைஞர்களை இந்தியாவிற்கு எதிராக புனிதப்போரில் ஈடுபடுமாறும் அடில் அஹமட் டார் தெரிவிப்பதை கேட்கமுடிகின்றது.

இரண்டாவது வீடியோவில் அடில் டார் இஸ்லாமிய மதத்திற்காக தான் மரணித்ததை ஒரு திருமணத்தை கொண்டாடுவது போன்று கொண்டாடுமாறு தனது குடும்பத்தவர்களை கேட்டுக்கொள்கின்றான்.

உலகமுழுவதிலும்  முஸ்லீம்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தங்களை விடுவிப்பதற்காக வீரமரணம் அடையவேண்டும் என தெரிவிக்கும் அடில் அஹமட் டார் ஆப்கானிஸ்தானில் தலிபானின் ஜிகாத் காரணமாக அமெரிக்க படையினருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

5 comments:

  1. @JM, இந்தியா இலங்கையின் மிகமுக்கிய நட்டு நாடு.
    எனவே ஒரு பயங்கரவாதியை போராளி என சொல்லி இப்படி எழுதுவது தவறு. சட்டவிரோதம்


    ReplyDelete
  2. If Adil Ahmed is a terrorist, all so called LTTE Maweerar also terrorist and traitors of Tamil community.

    ReplyDelete
  3. Common guys.. that was a drama of Modi, #Election_Narapali y dont u guy jst think

    ReplyDelete
  4. India was not our friend country. It was our first enemy historical. Who support our countries LTTE terrors for 27 years? Who don't like Srilanka to grow..? Its India. India is our enemy. China and Pakistan are our friend compare to India.

    ReplyDelete

Powered by Blogger.