Header Ads



ரஞ்சனிடமிருந்து வெளிப்பட்டுள்ள எச்சரிக்கை

முக்கிய அரசியல்வாதிகளின் மகன்மார் பலர், போதைவஸ்து கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தகவல்களை வெளியிடப்போவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற்றவர்களின் மகன்மார் தற்போதைய அமைச்சர்களின் மகன்மார், முன்னாள் அமைச்சர்களின் மகன்மார் உட்பட்ட பலர் உள்ளடங்குவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் தாம் இதனை எழுத்துமூலமாத சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், போதைவஸ்து மற்றும் பாதாள உலகத்தினரை பாதுகாத்த விதம் குறித்து தம்மிடம் புகைப்படங்களுடன் ஆதாரங்கள் உள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை கொக்கெய்ன் பயன்படுத்தும் தற்போதைய அமைச்சர்களின் பெயர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்தாலும் இன்னும் அவர் அதனை எழுத்துமூலம் தரவில்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

1 comment:

  1. He is a hero, but he should take enough precautions to safeguard himself. He is wrestling with powerful politicians/drug users. I won't be surprised if he is killed by an automobile accident.

    ReplyDelete

Powered by Blogger.