Header Ads



மதுஷை தூக்கிலிட, அலுகோசு பதவியைத் கேட்கும நாமல்

மரண தண்டனையை அமுல்படுத்துவதாயின், குற்றவாளிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவியை தனக்கு வழங்குமாறும் மாகந்துரே மதுஷை, தானே தூக்கிலிட விரும்புவதாகவும், பிரமுகர்களின் படுகொலைச் சதிகள் தொடர்பான பரபரப்பு தகவல்களை வழங்கியிருந்த ஊழலுக்கு எதிரான படையணியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில், நேற்றைய தினம் (06) ஊடகச் சந்திப்பொன்றை நடத்தியிருந்த நாமல் குமார, டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷுக்கு, நிச்சயமாக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் இதற்காக, தனக்கு சம்பளம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.