நானே ஜனாதிபதி வேட்பாளர், திட்டவட்டமாக தெரிவித்த ரணில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தானே போட்டியிட போவதாக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை சிங்கள வார பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி தனது வீட்டில் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுக்கு நெருக்கமான இந்த நபர்கள், முக்கியமான முடிவுகளை எடுக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அழைத்து கலந்துரையாடும் நபர்கள் எனவும் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அல்லது சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் எனவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஐக்கிய தேசியக் கட்சியினரில் பெரும்பான்மையானவர்கள் சஜித் போட்டியிட வேண்டும் என விரும்புவதாகவும் தெரிய வருகிறது.
இந்த ரணில் பேயனுக்கு எதிராக போட்டியிடும் எவரும் இலகுவாக வெற்றிபெருவார் என்று எந்த சிருபிள்ளையும் சொல்லும்
ReplyDelete