Header Ads



பிச்சைக்காரிபோல வந்தவர் தலையில், அடித்து முஸ்லிம் பெண் காயம்

கண்டி -  கெலிஓயவில், பிச்சைக்காரி போல் நடித்து வீட்டுக்கு வந்துள்ள ஒரு பெண் அரிசி கொஞ்சம் கேட்டுள்ளார்.

அரிசியை ஒரு பேக்கில், முஸ்லிம் பெண் போட்டுக்கொண்டு வருகையில், அரிசி கேட்டுவந்த பெண் தனது பையிலிருந்த கட்டை ஒன்றை எடுத்து, அந்த முஸ்லிம் பெண்ணின் தலையில் அடித்துள்ளார்.

காமடைந்த பெண் சத்தமிடவே, அருகிலுள்ள வீடுகளில் இருந்தவர்கள் ஓடிவந்து அரிசி கேட்டு வந்த பெண்னை பிடித்து கட்டிவைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சீனி சரூக் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

காயமடைந்த பெண், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்



No comments

Powered by Blogger.