முஸ்லிம்கள் போன்று சிங்களவரும் போதைப்பொருளினால், இலாபமீட்டுவது தவறா என மஹிந்த கேட்டுள்ளார் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் தெரிவிப்பு
முஸ்லிம்கள்தான் போதைப்பொருட்களை கொண்டுவருவதாக நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் சமூகவலைத்தளம் ஒன்று எனது பேச்சை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளதென ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கோப்குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனியார் ஊடகமொன்றில் கலந்துகொண்டு அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கலந்துரையாடினேன். இதன்போது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது, நீர்கொழும்பு பிரதேசத்தில் நிமல் லான்சாவின் வீட்டை திடீரென சுற்றிவளைத்த அதிரடிப்படையினர், அங்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருரை கைதுசெய்துள்ளனர்.
இதுதொடர்பாக எஸ்.பி. திஸாநாயக்க மஹிந்த ராஜபக்ஷவிடம் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இதற்கு மஹிந்த ராஜபக் ஷ எஸ்.பி. திஸாநாயக்கவிடம், “அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் கொண்டுவருபவர் அல்ல. அவர் விநியோகிக்கும் நடவடிக்கை மாத்திரம்தான் மேற்கொள்கிறார். முஸ்லிம்களும் தமிழர்களும் போரா இனத்தவர்களும் போதைப்பொருள் கொண்டுவந்து சம்பாதிக்கும்போது சிங்கள மக்கள் அதனை கொண்டுவந்து இலாபமீட்டினால் அதிலிருக்கும் தவறு என்ன?” என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டதாக எஸ்.பி. திஸாநாயக்க எனக்குத் தெரிவித்தார். அதனைத்தான் நான் குறித்த தனியார் ஊடக கலந்துரையாடலில் தெரிவித்தேன்.
ஆனால் எனது பேச்சை திரிபுபடுத்தி ‘கம்பஹா சிங்கயோ’ என்ற சமூகவலைத்தளம், முஸ்லிம்கள்தான் போதைப்பொருள் கொண்டுவருவதாக நான் தெரிவித்தாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் ஒருபோதும் இனவாதமாக எந்தக் கருத்தையும் தெரிவித்ததில்லை. கம்பஹாவில் முஸ்லிம்களுடன் முரண்பட்டுக்கொள்ள வைக்கும் முயற்சியாகவே இது இருக்கலாம். அதனால் செய்திகளை திரிபுபடுத்தும் மோசமான நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றார்.
STF catches an alleged drug dealer. President says if muslims can smuggle drugs why cant our guys sell it and make a living ? SB witnessed presidents conversation and pass the same to the current member of parliament. this story can topple a government in a day in some countries. not definitely in sri lanka. this is just a news for racists to attack muslims. they see nothing wrong about drugs or who is supporting drug dealers here. wonder of asia.
ReplyDeleteஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக போதை பொருள் தமிழர்களாளேயே கடத்தப்படுகிறது
ReplyDelete