Header Ads



பீல்ட் மார்ஷலின், பெயரை காணவில்லை

காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின், 71 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.

தமக்கு இன்னமும், அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

“பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவருக்கு உயர் மதிப்புக் கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. அவ்வாறான நிலையில் இந்தப் பதவிக்கு உரியை கௌரவம் கொடுக்கப்படா விட்டால், அத்தகைய நிகழ்வில் பங்கேற்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் தேசிய நாளை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்புக்கான, ஒத்திகை நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

இதன்போது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விருந்தினர்களின் பட்டியல்  அறிவிக்கப்பட்டது. அதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உங்கள் பெயர் இருக்கவாய்ப்புகள் இல்லை.உங்கள் வாயாலேயே அதை தின்று விழுங்கிவிட்டீர்கள். இனி அந்த யுனிபோமைக் கழட்டி அலுமாறியில் வைத்துவிட்டு வீட்டில் ஹாய்யாக ஓய்வெடுங்கள். அரசாங்கக்த்தில் அமைச்சராக இருந்து சம்பாதித்த கோடான கோடி வங்கிகளில் இல்லா விட்டாலும் அவை வைத்தஇடங்களில் அப்படியே பாதுகாப்பாக இருக்கும். அதைத்தூசி தட்டிவிட்டு தூங்குங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.