Header Ads



யானைகளின் பின்வரிசை, உறுப்பினர்களின் கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோரை கூடிய விரைவில் அமைச்சர்களாக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டு சட்டவிரோதமான அரசாங்கத்தை அமைக்க முயற்சித்த போது அதற்கு எதிராக பாலித ரங்கே பண்டார ஆற்றிய பங்களிப்பு குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து சரத் பொன்சேகா மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.