இன்னும் ஒரு வருடத்திற்கு, லதீபின் சேவை தொடரும்
ஓய்வு பெறவிருந்த லதீப் தனது சேவையை நாட்டுக்கு தொடர்ந்து வழங்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தன.
அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என சில ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
இந்நிலையில் அவர் அடுத்த ஒரு வருடத்திற்கு தனது சேவையை தொடரவுள்ளார்.
ஜனாதிபதியின் நம்பிக்கையை வென்று பாராட்டை பெற்ற SDIG லத்தீப்
தனது ஓய்வு காலம் நெருங்கிய வேளையிலும், பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் மகந்துரே மதூஸ் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய பகீரத முயற்சி மேற்கொண்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதியுமான எம்.ஆர் லத்தீப் ஜனாதிபதியின் விசேட பாராட்டை பெற்றுள்ளார்.
அத்துடன் நீண்ட காலமாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு மற்றும் திட்டமிட்ட படுகொலைகளை தடுத்து நிறுத்துதல் தொடர்பான அனுபவம் உள்ள லத்தீப் இம்மாதம் முதற்பகுதியில் ஓய்வு பெற்ற நிலையில் ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சியினால் தற்போது ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் சில தினங்களில் அவர் தனது சேவையை நாட்டிற்காக மேற்கொள்ளவுள்ளார்.
Post a Comment