Header Ads



உங்கள் பெயரிலும், சட்டவிரோத கொள்கலன் வரலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)


கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் கொள்கலன்களில் சுமார் 20 வீதமானவை உண்மையான உரிமையாளர்களின் பெயர்களில் கொண்டு வரப்படுவதில்லை என சுங்கத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு வரும் வர்த்தகர்கள் வரப் தங்களது பெயர்களில் கொள்கலன்களை கொண்டு வராமல், வேறு நபர்களின் பெயர்களில் கொள்கலன்கள் கொண்டு வரப்படுவதாக சார்ள்ஸ் கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

மூட்டை தூக்குபவர்கள், வாடகை வாகனச் சாரதிகள், காவலாளிகள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பெயர்களிலேயே கொள்கலன்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இந்த கொள்கலன்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளின் போது யாரின் பெயரில் கொண்டு வரப்பட்டதோ அவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள், மிளகு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் வேறு நபர்களின் பெயர்களில் கொண்டு வரப்பட்டிருந்தது.

கொள்கலன்களை மெய்யான உரிமையாளர்களின் பெயர்களில் கொண்டு வரக்கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Mrs. Charls. You’re a head of mostly corrupted criminals department. From top to bottom, everything runs on bribe in SL Customs department. Even a peon earns more than 5000,000 a day in bribe . No need to talk about others. This kinds of jugglares happen every day in your department and you are well aware of it. Even the robbed gem stones worth 700 million have been smuggled out of the country with one of your officers support.

    This particular case has been pulled out because either the importer is Muslim or some higher officials have not received their shares.

    If you are really a genuine civil servat, clean up your department first.

    ReplyDelete

Powered by Blogger.