Header Ads



கோத்தபாய கூறுவது பொய் - சீறுகிறார் குமார வெல்கம

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு வாழ்த்தும் குறிப்பிட்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ  வெளியிட்டுள்ள தகவல்கள்  முற்றிலும் பொய்யானதாகும்.

ஆகவே  குடும்ப உறவினை முன்னிலைப்படுத்தி அரசியலில் பிரவேசிப்பதற்கு  நாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது என    சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும், பொதுஜன பெரமுன முன்னணி ஆகியவற்றில் நிலவுகின்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது  மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவரது சகோதரர்கள்  ஆட்சிக்கு வர முயற்சிப்பது குடும்ப ஆட்வியினையே ஏற்படுத்தும்.முன்னாள் ராஜபக்ஷ கோதபாய ராஜபக்ஷ தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயார் என்று குறிப்பிட்டுள்ளமையானது அவரது தனிபட்ட தீர்மானமாகும்.இவருக்கும் எமது கட்சிக்கும் எவ்விதமாக தொடர்புகளும் கிடையாது.

No comments

Powered by Blogger.