Header Ads



சஜித் பிரேமதாச அல்ல எவரை வேட்பாளராக்கினாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே வெற்றி பெறுவார்

ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, அதில் வெற்றி பெற முடியாத வேட்பாளரை நிறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை தற்காத்து கொள்ளும் தேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -14- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவை ஜனாதிபதித் தேர்தல் என்றாலும் தற்போது நாட்டில் நடத்தப்பட வேண்டியது மாகாண சபைத் தேர்தல். ஐக்கிய தேசியக் கட்சியினர், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாச அல்ல ஐக்கிய தேசியக் கட்சி எவரை வேட்பாளராக நிறுத்தினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே வெற்றி பெறுவார் எனவும் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.