Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, மாடிவீட்டுத் திட்டம் - றிசாத்தின் முயற்சிக்கு, ரணில் இணக்கம்


யாழ்ப்பாணத்தில் குறித்தொதுக்கப்பட்ட காணியொன்றில், வீடமைப்புத் திட்டமொன்றை மேற்கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேற தயாராக இருக்கிற போதிலும், அவர்கள் அங்கு மீள்குடியேறுவதற்கான அடிப்படைத் தேவைகள் இல்லாமையினால், மீள்குடியேற்றத்தில் தடைகள் நிலவின.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற, ஆர்வத்துடன் செயற்படும் அமைச்சர் றிசாத் இவ்விடயத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதையடுத்து குறிப்பிடப்பட்ட பெரும் நிலப்பரப்பு காணியொன்றில், மாடி வீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள, இணக்கம் காணப்பட்டு அதற்கான அனுமதியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு வழங்கியுள்ளதாக Jaffna Muslim  இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.