Header Ads



பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, இவ்வருடம் தேர்தல் நடத்தப்படும்

அடுத்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் சமர்பிக்கும் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால், கட்டாயம் நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்.

122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறினாலும், எதிர்க்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே கட்டாயம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதியும் கூறி வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.