Header Ads



ரணில் என்னை சீண்டுகிறார் - மஹிந்த முன் கடுப்பாகிய மைத்திரி

“மாகாண சபைத் தேர்தலை ரணில் வேண்டுமென்றே இழுத்தடிக்கின்றார். மாகாண தேர்தலை ஒரே நாளில் நடத்தவேண்டுமென நான் அமைச்சரவையை கேட்டுள்ளேன். ரணில் என்னை சீண்டுகிறார். இதை இழுத்தடித்தால் நீதிமன்றம் சென்றே முடிவு காண வேண்டிவரும்..”

இவ்வாறு இன்று -06- இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

ஜனாதிபதியின் பெஜெட் வீதி வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உட்பட்ட முன்னணியின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலைவரம் , தேர்தலுக்கான பரந்த கூட்டணி குறித்து இங்கு விரிவாகப் பேசப்பட்டது. கூட்டணி அமைக்கவென உருவாக்கப்பட்ட டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவில் இன்று எம் பிக்களான டக்ளஸ் தேவானந்தா , முத்து சிவலிங்கம் ஆகியோரும் இணைக்கப்பட்டனர்.

இரண்டு வாரங்களில் இந்தக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

-Sivarajah-

No comments

Powered by Blogger.