Header Ads



அரச வானொலி விருதுபெற்ற, அறிவிப்பாளர்களுக்கு கௌரவம்


இவ்வாண்டின் அரச வானொலி தேசிய விருது பெற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பிராந்திய சேவை நிலைய அறிவிப்பாளர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

வானொலி அரச ஆலோசனைக்குழு, இலங்கை கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து அண்மையில் கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடத்திய அரச வானொலி விருது விழாவில் பிறை வானொலி அறிவிப்பாளர்கள் மூவர் சிறப்பு விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.  

இவ் விருது வழங்கல் நிகழ்வின்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவை நிலையமான பிறை எப்.எம் சேவைக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. இவ்விருதுகளைப் பெற்ற அறிவிப்பாளர்களை பாராட்டி கௌரவிக்கும்  அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பிறை எப்.எம்.வானொலி சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

பிறை எப்.எம்.வானொலியின் கட்டுப்பாட்டாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான பசீர் அப்துல் கையூம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பிறை எப்.எம்.வானொலியில் சந்தைப் படுத்தல் முகாமையாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான எஸ்.ரபீக் உள்ளிட்ட வானொலி அறிவிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இவ்வாண்டுக்கான சிறந்த கலந்துரையாடல் வானொலி நிகழ்ச்சிக்கான விருதினைப் பெற்றுக் கொண்ட அறிவிப்பாளர் ஏ.எல்.நயீம், இவ்வாண்டின் சிறந்த தயாரிப்பாளருக்கான ஜுரி விருதினைப் பெற்றுக் கொண்ட அறிவிப்பாளர் யூனுஸ் கே றகுமான் மற்றும் இவ்வாண்டின் சிறந்த வானொலி சஞ்சிகை நிகழ்சிக்கான ஜுரி விஷேட விருதினைப் பெற்றுக் கொண்ட அறிவிப்பாளர் ஜே.சியாஹுல் ஹக் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

(எம்.ஏ.றமீஸ்)

No comments

Powered by Blogger.