Header Ads



ரூபவாஹினிக்குள் அமைதியற்ற நிலை - தலைவர் காரியாலயம் சுற்றிவளைப்பு

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் விற்பனை முகாமையாளரை உடனடியாக பதவி நீக்குமாறு  வலியுறுத்தி, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும்  ஏனைய ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விற்பனை முகாமையாளரால் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அவரிடமிருந்து அறவிடக்கோரி, கூட்டுத்தாபனத்தின் தலைவர் காரியாலயத்தை சுற்றிவளைத்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.