Header Ads



ஞானசாரருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம் - பேஷ்புக்குக்கு அவரை பிடிக்கவில்லையா..?

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சம்பந்தமான தகவல்களையோ புகைப்படத்தையோ பேஷ்புக்கில் பதிவேற்றினால், பேஷ்புக் கணக்கை செயலிழக்க செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஞானசார தேரரின் பிரதான மாணவரான வீரகெட்டியே தயாசீஹ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ராஜகிரியவில் இன்று -20-  நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஞானசார தேரரின் பெயரை பதிவேற்றம் செய்த உடனேயே பேஷ்புக் கணக்கு செயலிழந்து போகிறது. இது சம்பந்தமாக நாடு முழுவதும் இருந்து பொதுபல சேனா அமைப்பு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இது குறித்து தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் வீரகெட்டியே தயாசீஹ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.