Header Ads



ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்காக மைத்திரிபால, எந்த காரியத்தையும் செய்ய அஞ்சமாட்டார்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதனையும் செய்வார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் முகாமை மாற்றிக் கொண்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தண்டிக்க முடியாது ஏனெனில் அவர்கள் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார்கள் என ஜனாதிபதி கூறுகின்றார்.

அப்படியென்றால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹிந்த, கோத்தபாய, விமல், பெசில் உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சியில் தானே இருக்கின்றார்கள் ஏன் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

ஜனாதிபதி செய்வதறியாது ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு வருகின்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றுகின்றார் என்பது நகைப்பிற்குரிய விடயமாகும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு காரியத்தையும் செய்ய அஞ்ச மாட்டார் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அதைத்தானே ஜனாதிபதி இபபோது ஒவ்வொரு நாளும் தன்னுடைய செய்கைகள்மூலம நிரூபணம் செய்து வருகிறார்.

    தன்னோட முதல்தர எதிரியான மகிந்தவை தற்போது தன்னுடைய முதல்தர நண்பனாகக் கருதி நடந்து கொள்லதைவிடவும் வேறுஒரு உதாரணம் இதற்குத் தேவையே இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.