தயாசிறிக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சை
சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சிறி ஜெயவர்த்தனபுர தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment