Header Ads



"எங்களுக்கும் கொஞ்சம்சொல்ல இடம் தாங்கப்பா" - மகிந்தவின் நகைச்சுவை

போதைப்பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சொன்ன விவகாரம் இன்று -20- முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எதிரொலித்ததாம்.

இப்படி பேசுவது அரசுக்கே அவமானம் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க இங்கு கோபத்துடன் சொன்னாராம்.

“ பால் மாவில் இரசாயனம் கலந்திருப்பதாக பிரதியமைச்சர் ஒருவர் கூறுகிறார்... அமைச்சர்கள் போதைப்பொருள் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ஒருவர் சொல்கிறார்.. எல்லாவற்றையும் நீங்களே சொன்னால் எப்படி... எங்களுக்கும் கொஞ்சம் சொல்ல இடம் தாங்கப்பா...”

என்று அப்போது நகைச்சுவையாக சொன்னாராம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...

No comments

Powered by Blogger.