மதூஷின் கைதுக்கு, காரணமானவர்கள் இவர்கள்தான் - ரஞ்ஜன் வெளியிட்ட பெயர் பட்டியல்
மாகந்துரே மதூஷ் உட்பட அவருடன் தொடர்புடைய சகாக்களை கைது செய்ய முன்னெடுத்த நடவடிக்கைக்குரிய முழு கௌரவமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே உரியது என இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
எஸ்.ரி.எப். இன் கட்டளையிடும் அதிகாரிக்கு ஜனாதிபதி பதவி நீடிப்பு வழங்காதிருந்தால், இவர்கள் பிடிபட்டிருக்காது. கட்டளை அதிகாரி ஓய்வு பெற்றதற்காகவே டுபாயில் மதூஷ் கொண்டாட்டம் நடாத்தியதாகவும் தகவல்கள் காணப்படுகின்றன.
ஜனாதிபதிக்கு அடுத்த படியாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரஞ்ஜித் மத்தும பண்டார, சாகல ரத்நாயக்க ஆகியோருக்கும், இந்தப்படைப் பிரிவை உருவாக்கிய ஸ்தாபகர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மகன் ரவி ஜயவர்தனவுக்கும், எஸ்.ரி.எப். இல் கடமையாற்றும் சகல அதிகாரிகளுக்கும் இந்த புகழ் செல்லவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment