Header Ads



டுபாய்க்கு கஞ்சாவை கடத்தமுயன்ற, பெண் கட்டுநாயக்காவில் பிடிபட்டார்

டுபாய் நாட்டுக்கு இரண்டு கிலோ கிராம் கஞ்சாவை கொண்டு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரனை பகுதியை சேர்ந்த 48 வயதான குறித்த பெண் டுபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக புறப்பட்டு செல்ல வந்த நிலையில், இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் பயணப்பையை சோதனையிட்ட போது 8 லட்சத்து 37 ஆயிரம் பெறுமதியான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பெண்ணும் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.