மருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை
நேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே...
நடந்தது இதுதான்...
மருதானை மேம்பாலத்துக்கு அருகில் இந்த ஜீப் செல்லும்போது பின்னால் ஒரு பொலிஸ் ஜீப் வருவதை இதன் சாரதி கண்டுள்ளார்...
அரெஸ்ட் பண்ணத்தான் வருகிறார்களோ என்று நினைத்து ஜீப்பை வேகமாக செலுத்த ஜீப் விபத்துக்குள்ளானது...
பின்னர் ஜீப்பில் இருந்து இறங்கி ஓட்டோ ஒன்றில் ஏறி தப்பினர் ஜீப்பில் இருந்தவர்கள்..
என்னடா இது நம்மை கண்டு ஓடுகிறார்களே என்று நினைத்து பொலிஸ் ஜீப்பில் இருந்து இறங்கியவர்கள் விபத்துக்குள்ளான ஜீப்பை சோதனையிட்டபோது அதில் இருந்த கஞ்சாவை கண்டுபிடித்தனர்...
பிடிபட்ட ஜீப்பின் உரிமையாளர் டுபாயில் இருக்கிறார்...( என்னடா இது டுபாய்க்கு வந்த சோதனை ..😁) அவர் இதனை வாடகைக்கு வாகனங்களை விடும் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளார்...
அந்த நிறுவனத்தில் இருந்து வாடகைக்கு பெற்ற ஒருவர் இந்த ஜீப்பை பயன்படுத்தி வந்துள்ளார்...!
-Sivaraja
Post a Comment