Header Ads



பிரபல பாதாளக்குழு தெமட்டகொட ருவன், பாகிஸ்தான் தம்பதி உள்ளிட்ட 8 பேர் கைது

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல பாதாளக்குழு உறுப்பினரான தெமட்டகொட ருவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 8 பேரில் பாகிஸ்தான் தம்பதியினரும் அடங்குகின்றனர்.

சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், பணம் எண்ணுவதற்கு பயன்படுத்தப்படும் 2 கருவிகள், 4 கிராம் ஹெரோயின் மற்றும் 3 சொகுசு வாகனங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெமட்டகொட பகுதியிலுள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தெமட்டகொட ருவன் என்பவர் பிரபல பாதாளக்குழுத் தலைவரான தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.