Header Ads



நீர்கொழும்பில் 7 கோடி ரூபாய் போதைப்பொருள் பிடிபட்டது - ஒருவர் கைது

நீர்கொழும்பு பிரதேசத்தில் சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஏஷ் போதைப் பொருள்களுடன் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 8.670 கிலோ கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் பரவியுள்ள போதைப் பொருளை ஒழிக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

அண்மை காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி தேடுதல் நடவடிக்கைகளில் நூற்றுக்காண கிலோ கிராம் ஹெரோயின், கஞ்சா, கொக்கேய்ன் உட்பட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகிறன.

1 comment:

  1. குற்றவாளிகளை தூக்கிலிட்டு/சுட்டுக்கொல்லனும்.பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்வது போன்று அந்த இடத்திலேயே சுட்டுத்தள்ளனும்.நாட்டுக்கும் மக்களுக்கும் சவாலான ஒன்றை இல்லாதொழிப்பதென்றால் இதைத்தவிர வேறுவழியொன்றுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.