Header Ads



மதூஷின் இலங்கை நெட்வேர்க்கை தகர்க்க பொலிஸார் மும்முரம் - முக்கிய 7 பேருக்கு வலைவீச்சு

மாகந்துரே மதூஷின் ஏழு முக்கிய சகாக்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தென் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மதூஷின் இலங்கை வலையமைப்பை முற்றாக முடக்கும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ள இந்த ஏழு பேரையும் தேடி இவ்விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன.  

9 பேரைத் தேடி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் சூரிய வெவயில் வைத்து கெசா எனும் அசேல எரங்க, சுசந்த குமார ஆகிய இருவர் தங்காலை குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் பாதாள உலக தடுப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டனர். 

இதன்போது ரீ 56 ரக துப்பககி மற்றும் தோட்டாக்கள் ஹெரோயின் என்பனவும் கைப்பற்றப்பட்டன. இந் நிலையிலேயே தென் மாகாணத்தில் மதூஷுக்கு மிக நெருக்கமான  மேலும் 7 பேரைத் தேடி விசாரணை தொடர்வதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.