7,000 மில்லியன் பெறுமதியான, இரத்தினக்கல் கொள்ளை - மதுஷூக்கு நெருக்கமானவர் கைது
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து 7,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல்லை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், மாக்கந்துரே மதுஷூக்கு நெருக்கமானவராக கருதப்படும், கசுன் தனஞ்சய ஹேவத் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் கிரிபத்கொடை – வெடிகந்த பிரதேசத்தில் வைத்து இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரத்தினக்கல், கடந்த வருடம் நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment