Header Ads



7 மாணவர்கள் சார்பில், சிராஸ் நூர்தீனும் ஆஜராகிறார்

- AAM. Anzir -

அநுராதபுர சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சர்பில், எதிர்வரும் 5 ஆம் திகதி, செவ்வாய்கிழமை மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆஜராகவுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள், சமூக நலன் விரும்பிகள் மேற்குறித்த 7 மாணவர்களையும் விடுவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மாணவர்களின் பெற்றோர்களும் சிராஸ் நூர்தீனை கொழும்பில் சந்தித்து, தமது மகன்களின் விடுதலைக்கு உதவும்படி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் சார்பில், சிராஸ் நூர்தீனும் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. சமூக சிந்தனை கொண்ட நல்லதோர் சட்டத்தரணி

    ReplyDelete

Powered by Blogger.