Header Ads



பௌத்த விகாரைக்கு 6 கோடி ரூபாவில், கட்டிடம் நிர்மாணித்துக்கொடுத்த மதுஷ்

மாகந்துரே மதுஷ் தனது தந்தை உயிரிழந்து மூன்று மாத நினைவை முன்னிட்டு தமது கிராமத்துள்ள ஸ்ரீ மண்டலாராமை கிரிந்த புஹூல்வெல்ல விகாரைக்கு 6 கோடி ரூபாய் பெறுமதியான கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து அன்பளிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த சமரசிங்க ஆராச்சிலாகே லக்ஷ்மன் என்ற மதுஷின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

அவரது இறுதி சடங்கின் போது ஹெலிக்கொப்டரில் இருந்து மலர் தூவப்பட்ட சம்பவம் அப்போது பரப்பரப்பாக பேசப்படடது. மதுஷ் துபாயில் இருந்தவாறு வீடியோ தொழிற்நுட்பத்தில் மூலம் தனது தந்தையின் இறுதி சடங்கை நேரடியாக பார்வையிட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல், கொலை உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் அண்மையில் துபாய் பொலிஸாரா் கைது செய்யப்பட்டார். அந்நாட்டின் ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் நடந்த விருந்தின் போதே அவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.