Header Ads



53 இலங்கையர்கள் இஸ்ரேலில், இருந்து நாடு கடத்தப்பட்டனர்

யாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் நேற்று அதிகாலை விசேட விமானங்கள் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் குரவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் ஒழுங்குவதிகளுக்கமைய இவர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணைகள் மேற்கொண்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், குறித்த யாத்திரியர்கள் சட்டவிரோதமான முறையில் இஸ்ரேல் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு நாடு கடத்தப்பட்ட அனைவரும் குளியாப்பிட்டி, வென்னப்புவ, மீரிகம, ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

1 comment:

  1. நீ என்ன பாதுகாப்பு போட்டாலும் உனக்கு எதிர்வு கூறப்பட்ட அழிவு வந்தே தீரும். சட்ட விரோத அமெரிக்காவின் கல்லப்பில்லையே......

    ReplyDelete

Powered by Blogger.