அரசியல்வாதியின் திருமண, வீட்டுக்கு செல்லவிருந்த மதுஷ் - 50 புலனாய்வு அதிகாரிகள் குவிந்தனர்
மதுஷுடன் நட்புறவாடவில்லையென்றால் மதுஷின் பணத்தைப் பயன்படுத்தவில்லையாயின் விமான நிலையத்துக்கு செல்லவில்லையாயின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பயப்படத் தேவையில்லை என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -13- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் லகஷ்மன் யாப்பா அபேவர்தனவின் மகனுடைய திருமண நிகழ்வுக்கு மாக்கந்துர மதுஷ் வரவிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸாரைக் கைதுசெய்வதற்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் குறித்த இடத்தில் இருந்தமையால் மதுஷ் அந்த திருமண விழாவுக்கு வரவில்லை என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
Post a Comment