Header Ads



ஓமானில் வபாத்தான 4 இலங்கையர்களின், ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம்

ஓமான் நாட்டில் கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற கோர விபத்­தொன்­றின்­போது அம்­பாறை மாவட்­டத்தின் அக்­க­ரைப்­பற்றைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஒரே குடும்­பத்­தினைச் சேர்ந்த மூவரும், பொத்­துவில் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த சிறுவர் ஒரு­வரும் மர­ணித்­துள்­ளனர். மேலும் இருவர் பலத்த காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

ஓமான் நாட்டின் அல்-­ஜபல் அல்-­அஹ்தார் என்னும் மலைப் பகு­தி­யினை அண்­டிய பிர­தே­சத்தில் இடம்­பெற்ற விபத்­தி­லேயே இவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களில் மூவர் சிறு­வர்­க­ளாவர். இச்­சம்­பவம் சனிக்­கி­ழமை நண்­பகல் 12.49 மணிக்கு இடம்­பெற்­ற­தாக ரோயல் ஓமான் பொலி­ஸாரை மேற்­கோள்­காட்டி ‘ரைம்ஸ் ஒப் ஓமான்’ பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.  ”ஓமானின் ஜபல் அல்–அஹ்தார் மலைப் பிர­தே­சத்தில் வாகனம் ஒன்று நிலை­யான பொருள் ஒன்றின் மீது மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் நால்வர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் இருவர் கடு­மை­யான காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இவர்கள் அனை­வரும் ஆசிய நாட்டைச் சேர்ந்­த­வர்கள்” என்றும் அச் செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ் விபத்தில் அக்­க­ரைப்­பற்று-01, அல்-­பாத்­தி­மியா வீதி­யினைச் சேர்ந்த முகம்­மது அபூ­பக்கர் காமிலா என்னும் 40 வய­து­டைய பெண்ணும் அவ­ரது மகள்­க­ளான 14 வய­து­டைய எஸ்.நவால், ஒன்­பது வய­து­டைய எஸ்.அபாப் ஆகி­யோ­ருமே உயி­ரி­ழந்த ஒரே குடும்­பத்­தினைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். இச்­சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த பெண்ணின் கண­வ­ரான கணக்­காளர் எஸ்.எம்.சக்கி மற்றும் அவ­ரது மற்­றொரு புதல்­வ­ரான அமூத் ஆகியோர் பலத்த காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் இவர்­க­ளோடு பய­ணித்த பொத்­து­விலைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட மற்­று­மொரு குடும்­பத்தைச் சேர்ந்த முஹம்மத் முஅஸ்ஸம் பாதிக் எனும் 6 வயது சிறு­வனும் இவ் விபத்தில் உயி­ரி­ழந்­துள்ளார்.

இச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,

விடு­முறை தினத்­தினை கழிக்கும் வகையில் அல்­–ஜபல் அல்–அஹ்தர் பிர­தே­சத்­திற்கு ஐந்து குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள் பல வாக­னங்­களில் ஒன்­றாக பய­ணித்துக் கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே இக்­கோர விபத்து சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 15 வருட கால­மாக மத்­திய கிழக்கு நாடு­களில் கணக்­கா­ள­ராக கட­மை­யாற்றி வரும் எஸ்.எம்.சக்கி,  தனது குடும்­பத்­த­வர்­க­ளுடன் ஓமான் மஸ்கட் பிர­தே­சத்தில் வசித்து வரு­கின்றார். கடந்த ஆறு மாத காலத்­திற்கு முன்னர் இலங்கை நாட்­டுக்கு தனது குடும்பத்தவர்களுடன் வருகை தந்து மீளவும் ஓமான் நாட்டுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை இன்றைய தினம் ஓமான் நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
-Vidivelli

No comments

Powered by Blogger.