மதுஷ் தனி சிறையில் அடைப்பு, அங்கொட லொக்கா தப்பியோட்டம் - 2 தொலைபேசிகள் மீட்பு
பிரபல பாதாள உலக புள்ளி மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் டுபாயில் தனித்தனி சிறையில் அடைப்பு.
சம்பந்தப்பட்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ளவந்து இறுதி நேரத்தில் தப்பிச் சென்றதாக சொல்லப்படும் அங்கொட லொக்காவை தேடி பொலிஸ் வலைவீச்சு..
மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட தரப்பினரை கைது செய்யும் போது அங்கொட லொக்கா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் அந்த விருந்தகத்தினுள் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த அவர் சிகரட் புகைப்பதற்காக அங்கிருந்து வெளியே சென்றிருந்த நிலையிலேயே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அங்கொட லொக்காக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த அவர் சிகரட் புகைப்பதற்காக அங்கிருந்து வெளியே சென்றிருந்த நிலையிலேயே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அங்கொட லொக்காக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுஷின் தொலைபேசிகள் இரண்டை கைப்பற்றிய டுபாய் பொலிஸார் , அவற்றுக்கு வந்துசென்ற அழைப்புக்களின் பட்டியலை எடுத்தனர்.
இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் பலருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுள்ள விபரம் வெளிவந்துள்ளதால், அந்த மேலதிக விசாரணைகளை இலங்கை பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்க அந்நாட்டு பொலிஸ் முடிவு...!
-Sivaraja-
Post a Comment