Header Ads



பொலிஸாரால் கடத்தப்பட்டு காணாமல்போன 2 வர்த்தகர்களின் உடல்கள் எரியுண்ட நிலையில் மீட்பு

பொலிஸாரால் கடத்தப்பட்ட நிலையில் காணாமற் போன காலி வர்த்தகர்கள் இருவரின் உடல்கள் பாதி எரியுண்ட நிலையில் மீட்பு...!

2

தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

காலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்த மாதம் 23 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.