ஐக்கிய தேசிய கட்சிக்குள், பெரும் பலாய் - பின்வரிசை Mp கள் பகிரங்க எச்சரிக்கை
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்கு நேரடி சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
எதிர்வரும் பாதீட்டு தொடர்பில் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்களின் அமைச்சுக்களின் வரவு செலவு விபரத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என அவர் சவால் விடுத்தார்.
பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
சில அமைச்சர்கள் தமது அமைச்சுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதை விரும்புவதில்லை எனவும், ஐக்கிய தேசிய கட்சி அல்லாத அமைச்சர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும், தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இனிவரும் காலங்களில் அமைச்சர்கள் மேற்கொள்ளும் தவறுகளை நேரடியாக எதிர்க்க தாங்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment