அமீரலியின் நீர்ப்பாசன திட்டத்தினை, முடக்கும் தமிழர் தரப்பு
மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு இராஜாங்க அமைச்சர் அமீரலி எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி விவசாயிகளால் இன்று -07- செங்கலடி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வாகனேரி திட்ட முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழுள்ள 14 அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய நீர்ப்பாசன திட்டத்தின் கீழுள்ள வாகனேரி நீர்ப்பாசன திட்டமானது. உறுகாம நீர்ப்பாசன திட்டத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திலிருந்து வாகனேரித் திட்டத்தை பிரிப்பதற்கு அமைச்சர் அமீரலி முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அவரின் இந்த செயலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக அங்கு கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தனிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment