Header Ads



புத்தளம் வாழ் யாழ் - கிளிநொச்சி, வெளியேற்றப்பட்ட சம்மேளனத்தின் அழைப்பு


அன்பார்ந்த எமது ஊர்பெருந்தகைகளே,                    

சமூக ஆர்வல சேவையாளர்களே

தனவந்த சேவையாற்றும் சமுதாய உத்தம உள்ளங்களே                  

சமூக சிந்தனையாளர்களே

கல்விப்புல குழுக்களாக சேவையாற்றிவரும்அமைப்புக்களே

கட்சி ரீதியாக சேவையாற்றிவரும்சமூதாய பிரமுவர்களே                

கடல்கடந்து சேவையாற்றும் உறவுகளின் பிரதிநிதி பெருந்தகைகளே              

வாருங்கள் ஒன்றுபடுவோம் ஒருமித்து பணியாற்றுவோம்     ஒரு பொதுவான தீர்வுக்கான தீர்மானங்களை முன்வைப்போம். அதற்காக செயற்படுவோம்.  

வடபுல முஸ்லீம்களின் ஆயுத முனையிலான இனச்சுத்திகரிப்பு வெளியேற்றம் உலகறிந்த உண்மை விடயமே இன்றுவரையில் இதன் உண்மைத்தன்மையை அறிய ஜனாதிபதி ஆணைக்குழுவை மாறிமாறி வரும் அரசாங்கம் முன்னெடுக்கப்படாமையே பிரதான  காரணமாகும்.

இதற்காக உள்ள பொறுப்புவாய்ந்த அரசியல் வாதிகளினால் , அதுசார்பான கட்சிகளினால் உரியவாறு அழுத்தம் கொடுத்தில் இருந்துவரும் அசமந்தபோக்கு  குறைபாடே இந்த வடபுல முஸ்லீம்களுக்கான காத்திரமான மீள்குடியேற்றங்களும் உரிய இழப்பீடுகளும் பெறப்படாமல் இருந்து வருகின்றர்.                     யாழ் , கிளிநொச்சி  மாவட்ட முஸ்லீம்கள் காத்திரமானதும் அவசரமாகவும் தங்களது மீள்குடியேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியாக மீள்குடியேற்றங்களை செய்ய வேண்டியுள்ள காலகட்டத்தில் உள்ளோம் இதற்காக குறுகிய காலமே உள்ளது.

எனவே இந்த விடயத்தில் நாம் கட்சி பேதங்களையும் அமைப்பு பேதங்களையும் மறந்து தூரநோக்காக ஒருமித்து ஒரேவகையிலான திட்டமிடலோடு எமது விடயங்களை பொதுவாக முன்வைக்கவேண்டியுள்ளது   இதன்படி உங்கள் சார்பான தீர்மானங்களை , முன்மொழிவுகளை முன்வைத்து காத்திரமான முடிவுக்கான தீர்மானங்களுக்காக செயற்படுவோம்.

மேலும் நீங்கள் உங்கள் உங்கள் கொள்கைகளிலும் செயற்பாடுகளிலும்  உங்களினால் செய்யமுடியுமானதை இன்றுவரையில் நீங்கள் சேவை செய்து பாேன்று செயற்படுங்கள் .

இன்ஷா அல்லாஹ் எமது விடயங்கள் தொடர்பாக  ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித்தவைலர்,நீண்டகால மீள்குடியேற்ற அமைச்சர், ஆளுநர், தமிழ் கூட்டமைப்பு போன்ற தரப்பினர்களுடனான சந்திப்புகளுக்கு நேர ஒதுக்கீடு கோரியுள்ளோம்.

விரைவில் எம்மவர் சார்பான விடயங்களை முன்வைத்தது தீர்வுக்காக முன்வைப்போம். எனவே இதுதொடர்பான ஒவ்வொரு தரப்பினர் சார்பாக எல்லாச்சந்தர்பங்களிலும் இயங்கக்கூடிய இரண்டு முக்கிய நபர்களை அனுப்பிவைத்து ஒத்துழைப்பை வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு சார்பாக வேண்டுகின்றோம்.    

.அப்பளுக்கற்ற சிந்தனையாலும், நசுங்கித்துடிக்கும் மக்களுக்களின் விடியலுக்காக பாடுபடும் தங்களும் தங்கள்சார்பான யாவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.        

புத்தளம் வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக சம்மேளனம் .            

 ஹ.பைறூஸ் 0719284996/0767284996

அ.மலிக்மௌலவி  0718618749  


2 comments:

  1. இவ்வாறு பல்வேறு கருத்து உடையவர்களையும் ஒரு குடையின் ஒன்று சேர்த்தால் அதன்மூலம் அல்லாஹ் பல்வேறு உதவிகளையும் அந்த சமூகத்துக்கு ஏட்படுத்துவான் .இதுதான் தற்போதைய காலத்தின் தேவையாகும்

    ReplyDelete

Powered by Blogger.